இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் புதிய கட்சி தொடக்கம் குறித்து கூறியுள்ள பொய்யான தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
Vijay Fans Blast SAC : தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனராக பல படங்களை இயக்கியவர் எஸ் ஏ சந்திரசேகர். தளபதி விஜயின் தந்தையான இவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் விஜயின் அனுமதி இல்லாமல் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு தளபதி விஜய் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இதனையடுத்து இந்த கட்சி பதிவு செய்யும் முயற்சியை கைவிட்டார் எஸ்ஏ சந்திரசேகர்.
ஆனால் தற்போது எஸ் ஏ சி மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய கட்சியை பதிவு செய்துள்ளார். இதன் இலையில் கட்சி தொடக்கம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பெரிய பொய் ஒன்றை கூறியுள்ளார்.
அதாவது கிறிஸ்துமஸ் தினத்தில் கட்சி தொடங்குவது குறித்து விஜயை சந்தித்து பேசியதாகவும் அவருக்கு வாழ்த்துக் கூறி மோதிரத்தை பரிசாக அளித்ததாகவும் கூறியிருந்தார்.
ஆனால் உண்மையில் அன்றைய தினத்தில் தளபதி விஜய் சென்னையிலேயே இல்லை, தளபதி விஜய் தன்னுடைய அப்பாவுடன் பேசியே பல மாதங்கள் ஆகிவிட்டன என தற்போது தகவல்கள் வெளியாகி வைரலாக பலரும் எஸ் ஏ சந்திரசேகரை எதற்கு இப்படி பொய் சொல்லணும் என விமர்சனம் செய்து வருகின்றனர்.