தளபதி கொடுத்த நிவாரண தொகையில் அஜித் ரசிகர் ஒருவருக்கு உதவியுள்ளார் விஜய் ரசிகர்.
Vijay Fan Help to Ajith Fan : சீனாவில் உருவாகிய கரோனா வைரஸ் கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட நாடுகளை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன. மக்கள் வேலை இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.
இதனால் திரையுலக பிரபலங்கள் பலரும் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில் தளபதி விஜய் மத்திய மாநில அரசுகளுக்கு நிதி அளித்தது மட்டுமல்லாமல் தன்னுடைய ரசிகர்களின் வங்கி கணக்கில் நேரடியாக ரூபாய் ஐந்தாயிரம் செலுத்தி வருகிறார்.
அப்படி விஜய் அளித்த நிவாரண நிதியை பெற்ற ரசிகர் ஒருவர் தனக்கு கிடைத்த பணத்தில் தன்னுடைய நண்பரும் அஜித் ரசிகரான ஒருவற்கு உதவியுள்ளார்.
அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
தளபதி ரசிகர்களுக்கு மத்தவங்களை வாழ வெச்சு தான் பழக்கம் ! 😍❤ தளபதியால் அஜித் ரசிகருக்கு கிடைச்ச உதவி ! ❤ #Master #Thalaivaa @actorvijay 😘pic.twitter.com/BLVAh4GhJv#AjithFansBotsExposed
— தகவல் தொழில்நுட்பஅணி தலைமை – கும்பகோணம் (@KUMBAKONAM_VMI) April 26, 2020