Sarkar

தளபதி விஜய் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பலமான இடத்தை பிடித்து ஆந்திராவை தன்னுடைய கோட்டையாக மாறுவதற்கான முயற்சியில் இறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார். தமிழகத்தை போலவே கேரளாவிலும் விஜய்க்கு மிக பெரிய மார்க்கெட் உள்ளது.

ஆனால் ஆந்திராவில் சூர்யா, கார்த்திக்கு தான் அதிக ரசிகர்கள். விஜயின் மார்கெட் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது.

இதனால் ஹைதராபாத்தில் வரும் அக்டோபர் 29-ம் தேதி நடைபெற உள்ள சர்கார் ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்ச்சியாக்க இருப்பதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.

மிக பெரிய நடிகரான விஜய் தன்னுடைய ரசிகர்களுக்காக தானே இறங்கி படத்தை ப்ரோமோஷன் செய்ய உள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

தெலுங்கு ரசிகர்களும் விஜயின் வருகைக்காக ஆவலுடன் காத்துக் காத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது வைரலாக இந்த தகவல் உண்மையில்லை என விஜயின் மக்கள் தொடர்பாளரான ரியாஸ் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் விஜயின் வருகையை எதிர்பார்த்திருந்த தெலுங்கு ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.