IT ரெய்டால் தளபதி விஜய் எடுத்த அதிரடி முடிவு பற்றிய பேச்சு தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Vijay Decison After IT Raid : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் 15-ம் தேதி நடைபெற உள்ளது.
ஆனால் ரசிகர்களுக்கு அழைப்பு இல்லை, இதனால் சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பட உள்ளது. இதற்கான காரணம் கொரானா வைரஸ் பரவி வருவது தான் என ஏற்கனவே ஒரு தகவல் பரவி வந்தது. ஆனால் தற்போது உண்மை என்ன என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
IT ரைட் குறித்த பிரச்சனைகளுக்கு மாஸ்டர் ஆடியோ விழாவில் பதில் சொல்லுவார் என விஜயின் அப்பா SAC தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கொளுத்தி போட அது விஜயை வேற மாதிரியான முடிவுக்கு கொண்டு சென்றுள்ளது.
சென்னையில் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தினால் நிறைய பிரச்சனைகள் இருக்கும் என எண்ணி படக்குழு கோவையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியை அணுகியதாக கூறப்படுகிறது.
ஆனால் கல்லூரி நிர்வாகமோ சாய் ராம் காலேஜ்ல நடந்ததெல்லாம் எங்களுக்கு தெரியும், இங்க இசை வெளியீட்டு விழா நடத்த முடியாது என கை விரித்துள்ளது.
இதனால் விஜய் ஸ்டேடிலைட் உரிமையை வாங்கியுள்ள சன் டிவியை தொடர்பு கொண்டு நேரடியாக ஒளிபரப்புவது பற்றி பேச அவர்களும் டபுள் ஓகே என கூறியுள்ளனர்.
மேலும் விஜயும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு அலைய வேண்டிய அவசியமில்லை, தன்னுடைய உறவினர் தயாரிப்பு என்பதால் செலவும் கொஞ்சம் மிச்சம் என ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்து விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் விஜய் இப்படத்திற்கு ரூ 80 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாகவும் வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.