என் புள்ளையே என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும் அதுவும் வரலாறு தானே என விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இன்றைய தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் முக்கியமான ஒருவராக வலம் வருகிறார்.
இவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் பிரபலமான இயக்குனர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் சில தினங்களுக்கு முன்னர் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பைத் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தார்.
இது குறித்த தகவல்கள் இணையத்தில் பரவ தளபதி விஜய் உடனடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் எனக்கும் அந்தக் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று ரசிகர்கள் அதில் இணைந்து பணியாற்ற வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
மேலும் அந்தக் கட்சிக்காக என்கிற பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களிடம் கேட்டதற்கு இந்த கட்சிக்கும் விஜய்க்கு எந்த சம்பந்தமும் இல்லை. அவருடைய ரசிகராக நான் தான் இதை உருவாக்கினேன்.
சட்டப்படி நடவடிக்கை பாயும் என கூறியுள்ளார் என கேட்டதற்கு கெடுக்கட்டும் உன் பிள்ளையை என்னை ஜெயிலுக்கு அனுப்புகிறார் அதுவும் வரலாறுதானே என உருக்கமாக பேசியுள்ளார்.
மேலும் விஜய் வளர்ச்சிக்காக தான் படங்களை இயக்கும் வேலையை விட்டுவிட்டு அவருக்கு PRO-ஆக, பியூனாக பணியாற்றியதாக கூறியுள்ளார். மேலும் எனக்கு விஜய் தான் கடவுள் எனவும் பேசியுள்ளார்.