Vijay Complaint in Police Station

அந்த இரண்டு பேரையும் என் வீட்டில் இருந்து காலி பண்ண சொல்லுங்க என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் தளபதி விஜய்.

Vijay Complaint in Police Station : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதாவது விருகம்பாக்கத்தில் தனக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வரும் ரவி ராஜா மற்றும் ஏசி குமார் ஆகியோரை வெளியேற்றி வீட்டை காலி பண்ணி கொடுக்குமாறு போலீசில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய செயலாளராக இருந்து வந்தவர் ரவி ராஜா. துணைச் செயலாளராக இருந்து வந்தவர் ஏசி குமார். இவர்கள் இருவரும் எஸ்ஏ சந்திரசேகர் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புரூஸ்லி ஆனந்த் இவர்களை இயக்கத்தில் இருந்து நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.