விஜய் மற்றும் எஸ்.ஏ.சி பிரிவுக்கு காரணம் என்ன என பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது வாரிசு திரைப்படம்.
தளபதி விஜயின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் விஜயின் மனைவி சங்கீதா பங்கேற்காத நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது அதேபோல் விஜய் மற்றும் எஸ்.ஏ.சி பிரிவுக்கு சங்கீதா தான் காரணம் என பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தளபதி விஜய் படங்கள் சார்ந்த வேலைகள் அனைத்தையும் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் கவனித்து வந்த நிலையில் சங்கீதா ஏன் இதையெல்லாம் நீங்களே கவனித்துக் கொள்ளலாமே என விஜய் இடம் சொல்ல அதன் பிறகு விஜய் அவருக்கான அனைத்து வேலைகளையும் அவரே பார்க்க தொடங்கினார்.
மேலும் பழைய ஆட்கள் அனைவரையும் தூக்கி விட்டு புதிய ஆட்களை நியமிக்க தொடங்கினார். இதனால் விஜய் மற்றும் அவருடைய அப்பாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட தொடங்கியது. அதன் பின்னர் தான் விஜய் சங்கீதா மற்றும் குழந்தைகளுடன் தனியாக வீடு கட்டி சென்று விட்டார் என தெரிவித்துள்ளார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.