john Mahendran : இன்று தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாகவும் ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி மன்னனாகவும் வலம்வரும் விஜய், ஆரம்ப நாட்களில் காதல் படங்கள் மூலமாகதான் ரசிகர்களின் மனங்களை வென்றார்.
ஆரம்பத்தில் ஒரு சராசரி நடிகராக இருந்த விஜய்யை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது அவர் நடித்த காதல் படங்களே.
திருமலைக்கு பிறகு ஆக்ஷன் படங்களில் நடித்து மாஸ் ஹீரோவாக மாறிய விஜய், தன்னுடைய ரசிகர்களுக்காக மீண்டும் கல்லூரி மாணவனாக ஜாலியான லவ்வர் பாயாக சச்சின் படத்தில் நடித்தார்.
வெளியான நாளில் வரவேற்பை பெறாவிட்டாலும் இன்றும் விஜய் ரசிகர்களுக்கு மிகவும் ஃபேவரிட்டான படம் சச்சின்.
இன்னும் சொல்லப்போனால் விஜய்யை பிடிக்காதவர்களுக்கு கூட பிடித்த ஒரு படம் சச்சின். இதில் ஜெனிலியா, விஜய் இடையிலான காதல் காட்சிகளும் விஜய்யின் குறும்பு நடிப்பும் பலரது பாராட்டுக்களை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தை இயக்கிய ஜான் மகேந்திரன், தற்போது விஜய் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது: ” நான் விஜய்யை முதன்முதலில் சந்தித்த போது அவரை பெயர் சொல்லிதான் அழைத்தேன். அதை அவர் அருகில் இருந்தவர்கள் கவனித்து பின்னர் என்னை கடிந்துகொண்டார்கள்.
நீங்கள் எப்படி அவரை பெயர் சொல்லி அழைக்கலாம் என்றார்கள். அதன்பின் நானும் விஜய்யும் நெருங்கிய நண்பர்கள் ஆனோம். அப்போது இதுகுறித்து விஜய்யிடமே கேட்டேன்.
நான் உங்களை விஜய் என்று அழைப்பது உங்களுக்கு பிரச்னை இல்லையே என நான் கேட்டபோது அதனால் என்ன அண்ணா, என் பெயர் அதுதானே என விஜய் கேஷுவலாக சொன்னார்.
அதுதான் விஜய். ஒரு இயக்குநரை நம்பிவிட்டால் அவர் தன்னை முழுவதுமாக ஒப்படைத்துவிடுவார்” என்றார்.