இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது instagram பக்கத்தில் நயன்தாராவின் புகைப்படத்தை வைத்து காதல் பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். இதற்கு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கோலிவுட் திரை உலகில் பிரபல காதல் தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவரும் எட்டு வருடங்களாக காதலித்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு தங்களது ஹனிமூன் புகைப்படங்களால் இணையத்தை ஆக்கிரமித்து வந்த இவர்கள் தற்போது இரட்டை குழந்தைகளுக்கு அப்பா அம்மாவாகியுள்ளனர்.

தற்போது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதில் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் மனைவியும், நடிகையுமான நயன்தாராவின் போட்டோவை கையில் வைத்துக் கொண்டு ,பாஸ்போர்ட் சைஸ் போட்டோவில் கூட பளபளக்கும் பந்தூரமே என்று குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். இதனை கண்ட நெட்டிசன்கள் திருமணத்திற்கு பின்தான் விக்கிக்கு ,நயன்தாரா மீது காதல் அதிகரிக்குது போல என்று கமெண்ட் செய்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.