சுஷாந்த் சிங்கிற்கு நடந்தது போல தனக்கும் நடந்ததாக வித்யா பிரதீப் கூறியுள்ளார்.
Vidya Pradeep About Career : தமிழ் சினிமாவின் படம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் வித்யா பிரதீப். மேலும் இவர் சின்னத்திரையில் நாயகி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இவர் தடம் படத்திற்கு முன்னதாக ஆறு படங்களில் கமிட்டாகி இருந்ததாகவும் ஆனால் திடீரென 6 படங்களில் இருந்தும் தன்னை நீக்கி விட்டதாகவும் கூறியுள்ளார்.
தன்னுடைய துறை வேறு என்பதால் தனக்கு சினிமா செட் ஆகாது என கூறியதாகவும் இதனால் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மன உளைச்சலுக்கு ஆளானது போல தானும் அதே நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
அதை பின்னர் நான் படிப்பில் கவனம் செலுத்தினேன் என வித்யா பிரதீப் கூறியுள்ளார்.
வித்யா பிரதீப் மருத்துவத் துறையை சேர்ந்தவர். தற்போது இவர் கொரோனா வைரஸ் காரணமாக மீண்டும் தன்னுடைய தொழிலை கையில் எடுத்தேன் சேவையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.