அஜித் இப்படி இருப்பாருனு நான் நினைத்து கூட பார்க்கல என வித்யா பாலன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
Vidhya Balan Interview : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்டப்பார்வை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்துள்ளார்.
தற்போது முதல் முறையாக தல அஜித்துடன் நடித்தது குறித்தும் கோலிவுட் சினிமாவிற்குள் நுழைந்திருப்பது குறித்தும் பேட்டி கொடுத்துள்ளார் வித்யா பாலன்.
அந்த பேட்டியில் போனி ஜி ஒரு நாள் எனக்கு போன் செய்து நான் தமிழ் படம் தயாரிக்க உள்ளேன் நீங்க நடிக்க வேண்டும் என கூறினார். அதன் பின்னர் ஒரு பக்க கதையுடன் என்னை நேரில் சந்தித்து பேசினார். நான் கதையை கூட கேட்கவில்லை. நடிக்க ஓகே சொல்லி விட்டேன்.
அதற்கு காரணம் எனக்கு போனி கபூர் ஜி மற்றும் ஸ்ரீ தேவி ஜி மீது அதிக மதிப்பும் மரியாதையும் உண்டு. அதன் பிறகு தான் தெரிந்தது இது பிங்க் படத்தின் ரீமேக், இதில் அஜித் நடிக்கிறார் என்பது.
அஜித்திற்கு நிறைய ரசிகர்கள் உள்ளார்கள் என்றெல்லாம் கேள்விப் பட்டுள்ளேன். ஆனால் அவர் இவ்வளோ சிம்பிளா இருபாருனு நான் எதிர்பார்க்கவே இல்லை. ப்ரண்ட்லியான மனிதர். அவருடன் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி.
சிவகார்த்திகேயன் படத்தால் வந்த நஷ்டம், ஆனால் ஆப்பு ஜெயம் ரவிக்கு? – ஷாக்கிங் தகவல்.!
எனக்கும் அஜித்திற்கும் இடையே ஒரு பாடல் உள்ளது. இந்த பாட்டு கணவன் மனைவிக்கு இடையேயான அன்னோன்னியமான அற்புதமான உறவை பேசும்படியாக இருக்கும். இதற்கு மேல் படத்தை பற்றி நான் சொல்ல கூடாது என கூறியுள்ளார்.
மேலும் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு காலெடுத்து வைப்பது பெருமையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே வித்யா பாலன் தமிழில் மனசெல்லாம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கியதும் இவருக்கு நடிப்பு வரவில்லை என தூக்கி விட்டு த்ரிஷாவை நடிக்க வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.