Vidhya Balan About His Career : தமிழ் சினிமாவில் அண்மையில் நேர்கொண்டvபார்வை என்ற படத்தில் அஜித்துக்கு ஜோடி சேர்ந்த வித்யாபாலன் தனது பேட்டியில் மனம் திறந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது: எனது முதல் படத்திலேயே மோகன்லாலுடன் கதாநாயகியாக நடித்தேன். முதல் படம் முடிந்தபின் அடுத்தபடியாக எனக்கு எட்டு படத்தில் வாய்ப்பு கிடைத்தது.
மிகவும் மகிழ்ச்சியில் திளைத்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக என் முதல் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. ஆனால் நான் மீதம் எட்டு படம் இருக்கிறதே என்று சந்தோசத்தில் இருந்தேன்.
முதல் படம் பாதியில் நிற்கிறது என்பதை அறிந்த, மற்ற படங்களில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் என்னை ஒதுக்கி விட்டது.
ஒரே படத்திலேயே “நான் ராசியில்லாத நடிகை” என்ற முத்திரை குத்தப்பட்டது. ஆனால் நான் அதற்கெல்லாம் கவலைப் படாமல் எனது முயற்சியை கைவிடாமல் அடுத்தடுத்த படங்களுக்கு முன்னேறி சென்றேன்.
சினிமா திரையுலகில் ஒரு காலகட்டத்தில் நிராகரிக்கப்பட தான், அதுக்கெல்லாம் கவலைப்படாமல் முன்னேறி சென்றால் மட்டுமே இந்த சினிமா ஃபீல்டில் இருக்க முடியும் என்று தனது மனஉருக்கம் கலந்த தனக்கே உரித்தான தைரியத்துடன் பேட்டியளித்தார்.