கதைக்கு விஜய் ஓகே சொல்லி இருப்பதாக வெற்றி மாறன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Vetrimaran About Thalapathy Vijay Movie : தென்னிந்திய சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். தமிழ் சினிமாவில் பொல்லாதவன் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கி வரும் இவர் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஆத்மா, மறுபிறவி எடுத்திருந்தால் தர்ப்பணம் வீணாகுமா?

இவர் தற்போது நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். அதனைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்க உள்ளார். தளபதி விஜய்க்கு கதை ஒன்றைக் கூறி அவரை இயக்க காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது தளபதி விஜய் அந்தக் கதைக்கு கிரீன் சிக்னல் காட்டியுள்ளார்.

இதனையடுத்து தன்னுடைய கதை கேட்டு தளபதி விஜய் பிடித்திருப்பதாக கூறினார். உங்கள் கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு வாங்க. விரைவில் இணைந்து பணியாற்றுவோம் என தளபதி விஜய் தெரிவித்திருப்பதாக வெற்றிமாறன் கூறியுள்ளார். மேலும் இன்றைய கால சூப்பர் ஸ்டார் விஜயோடு இணைந்து பணியாற்ற ஆவலோடு காத்துக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

திரும்பவும் அந்த மாதிரி பண்ண முடியுமான்னு தெரியல! – Actor Arya SPeech | Enemy Press Meet