அத நெனச்சா இப்பவும் காண்டு ஆகுது என ஆடுகளம் படத்தின் தவறை பற்றி பேசி உள்ளார் வெற்றிமாறன்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் வெளியாக்கி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ஆடுகளம்.
சமீபத்தில் இவரது இயக்கத்தில் விடுதலை திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் ஆடுகளம் படத்தில் இடம்பெறும் வெல்லாவி வச்சு தான் வெளுத்தாங்களா என்ற பாடல் குறித்து பேசி உள்ளார்.
இப்போ இந்த பாடலை நினைச்சாலே காண்டாகுது, வெள்ளையா இருக்கிற பெண்களை தான் ரசிக்க வேண்டும் என்பது இல்ல. அப்போ புரிதல் இல்லாம இப்படி பண்ணிட்டோம், அதை அப்பவே கவனிச்சு அந்த வரிகளை மாற்றி இருக்கணும் என வெற்றிமாறன் பேசி உள்ளார்.
அவர் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் இது குறித்து பலவிதமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க? கமெண்ட்டில் சொல்லுங்க
https://twitter.com/swatson2022/status/1643110994598854658?t=9V5XebuD7dPNInrFEmbs8Q&s=19