பக்கா மாஸ் ஆன கதையுடன் பத்து வருஷமாக அஜித் வார்த்தைக்காக காத்துக்கொண்டிருக்கிறார் பிரபல இயக்குனர் ஒருவர்.
Venkat Prabhu Waiting For Ajith Response : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் பில்லா படத்தின் இரண்டாம் பாகத்தை தவிர வேறு எந்த படங்களின் இரண்டாம் பாகத்திலும் நடித்ததில்லை.
இப்படியான நிலையில் தல அஜித்துக்காக இரண்டாம் பாக கதை ஒன்றை உருவாக்கி கிட்டத்தட்ட பத்து வருடங்களாக அஜித்தின் ஓகே என்ற ஒத்த வார்த்தைக்காக காத்துக் கொண்டிருக்கிறார் பிரபல இயக்குனர் ஒருவர்.
அவர் வேறு யாரும் இல்லை இயக்குனர் வெங்கட் பிரபு தான். இவரது இயக்கத்தில் அஜித் மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மங்காத்தா.
இந்த படத்தின் இரண்டாம் பாக கதையை உருவாக்கி பத்து வருஷமாக அஜித் ஓகே சொல்ல மாட்டாரா என காத்துக் கொண்டிருக்கிறார் வெங்கட் பிரபு.
அஜித், விஜய் இணைந்து நடிக்க ஒரு ஐடியா இருக்கு, ஆனால் அதுக்கு?? – வெங்கட் பிரபு ஓபன் டாக்.!!
மேலும் தல அஜித் மட்டும் இந்த படத்தில் நடிக்க ஓகே சொல்லி விட்டால் அடுத்த நாளே சூட்டிங்கிற்கு கிளம்பி விடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவரின் கூட்டணியில் மங்காத்தா 2 படம் எப்போது உருவாகும் என ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். மங்காத்தா-2 உருவானால் நிச்சயம் அது தமிழ் சினிமாவில் புதிய சரித்திரம் படைக்கும் என எதிர்பார்க்கலாம்.