Venkat Prabhu Comments on STR : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் தற்போது மாநாடு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இந்த படத்தில் முதலில் சிம்பு நடிக்க ஒப்புக் கொண்டு பின்னர் ஷூட்டிங்கிற்கு வராமல் பிரச்சினை செய்ததால் படம் கைவிடப்பட்டது.
அதன்பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது சிம்புவை நடிக்க வைக்க ஒப்புக்கொண்டார் அவரது அம்மா. அம்மாவின் அறிவுரையை ஏற்று சிம்புவும் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் தற்போது வெங்கட் பிரபு அளித்துள்ள பேட்டி ஒன்றில் சரியான நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு வந்து விடுகிறார். காலை முதல் இரவு வரை ஒரு டேக் கூட எடுக்காமல் சரியாக நடித்துக் கொடுக்கிறார்.
நைட்டில் ஷூட்டிங் இருக்கும் போது ஏன் சார் நைட்டெல்லாம் சூட்டிங் வச்சி தொந்தரவு பண்றீங்க என ஜாலியாக கேட்பார். துணை இயக்குனர்கள் இவரைப் பற்றியா இப்படி பேசுகிறார்கள்? சிம்புவுக்காக இந்த நிலைமை என கேட்பார்கள்.
மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் முடிவடைந்த பின்னர் தான் மீதம் உள்ள படப்பிடிப்புகள் துவங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.