மாநாடு படம் பற்றி வெளியான தகவலால் இயக்குனர் கடுப்பாகி உள்ளார்.
Venkat Prabhu Clarification on Maanadu : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சுரேஷ் காமாட்சி படத்தில் அதிக சம்பளம் வாங்குபவர்களின் சம்பளத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்து கொண்டதாகவும் இதனால் படக்குழு இறுதிகட்ட பணியை தொடங்காமல் இருப்பதாகவும் தகவல் வெளியானது.
ஜெயலலிதா பட நாயகி Kangana Ranaut வெளியிட்ட புதிய புகைப்படம்! – இப்போ இதான் Trend
இதனால் படக்குழுவினர் படப்பிடிப்பை தொடங்காமல் நிறுத்தி வைத்திருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த தகவல் முற்றிலும் பொய். எதுவுமே உண்மை இல்லை. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது வெங்கட்பிரபு விளக்கம் அளித்துள்ளார்.