சிம்பு செய்த உதவி தான் நான் சினிமாவின் இருக்க காரணம் என கூறியுள்ளார்.
Venkat Prabhu About Simbu : தமிழ் சினிமாவில பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு அளித்துள்ள பேட்டி வந்த சிம்பு தனக்கு செய்த உதவி குறித்து பேசியுள்ளார்.
தன்னுடைய முதல் படமான சென்னை 28 திரைப்படம் வெளியானபோது பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது. மதுரை ஏரியாவில் யாரும் படத்தை வாங்கவில்லை.
அப்போது சிம்பு தான் தனக்குத் தெரிந்த விநியோகஸ்தர் ஒருவரிடம் இந்த படத்தை வாங்கி விநியோகம் செய்யுங்கள் என கூறி விற்பனையாக உதவி செய்தார்.
அவர் இல்லை என்றால் நான் இன்று இங்கே சினிமாவில் இருந்து இருக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார். அதற்கு நன்றி செலுத்தும் விதமாகவே தற்போது மாநாடு என்ற திரைப்படத்தை மாஸாக உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.