அஜித்துக்கு வில்லனாக நடிக்க தளபதி விஜய் ஆசைப்படுவதாக வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து நேற்று மன்மதலீலை என்ற படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் வெங்கட்பிரபு தல அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தின் படப்பிடிப்பில் அஜித், விஜய் என இருவரையும் ஒரே நேரத்தில் சந்தித்த தருணம் குறித்து பேசியுள்ளார்.

அதாவது உங்கள் இருவரையும் ஒன்றாக வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என வெங்கட் பிரபு கூட அப்படி ஒரு வேளை படம் இயக்கினால் அது நான் தான் வில்லன் என தளபதி விஜய் அவர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் பலரையும் வியக்க வைத்து வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் இரு பெரும் உச்ச நடிகர்களாக அஜித் விஜய் இருந்து வரும் நிலையில் இருவரையும் ஒரே படத்தில் காண முடியுமா? ரசிகர்கள் இதனை ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகம் தான்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.