பாடகர் வேல்முருகன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் பேட்டி ஒன்றில் ரம்யா பாண்டியன் பற்றிக் கூறிய விஷயம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
Velmurugan Blast Ramya Pandian : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் மற்றும் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
அவர்களில் ரேகா முதல் வாரத்தில் வெளியேறிய நிலையில் கடந்த வாரம் வேல்முருகன் வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வேல்முருகன் அளித்த பேட்டி ஒன்றில் பிக்பாஸ் வீட்டிற்கும் யார் பச்சோந்தி என கேட்டதற்கு அவர் ரம்யா பாண்டியன் தான் என தெரிவித்துள்ளார்.
அதாவது ரம்ய பண்டியன் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் சார் பின்பு நல்ல பெயர் எடுக்க வேண்டும் எனவும் மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காகவும் பச்சோந்தி போல் நடிக்கிறார் என கூறியுள்ளார்.
சுரேஷ் சக்ரவர்த்தியும் அப்படி தான். ஆனால் அவர் சொல்லிவிட்டுத்தான் கொளுத்தி போடுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
ரம்யா பாண்டியன் பச்சோந்தி போல நடிப்பதாக வேல்முருகன் சொன்ன தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படியே அவர் இவர் சொல்வது போல நடித்தாலும் எவ்வளவு நாளைக்கு நடிக்க முடியும் என்பதை பார்க்கலாம் எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.