வாத்தி திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கடந்து வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தற்போது பிசியாக நடித்து வரும் இவர் இதற்கிடையில் வெங்கி அட்லூரில் இயக்கத்தில் உருவாகி இருந்தா ‘வாத்தி’ திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி நேரடியாக வெளியாக உள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி இருந்த இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து இருந்த நிலையில் இப்படத்தில் யுக பாரதி எழுதியிருக்கும் செகண்ட் சிங்கிள் பாடலான ‘நாடோடி மன்னன்’ என்னும் பாடல் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி வெளியானது.

தற்போது இப்பாடல் ரசிகர்களின் மனதை அதிக அளவில் கவர்ந்து இதுவரை 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 1 லட்சம் லைக்குகளை பெற்று இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருவதை மகிழ்ச்சியுடன் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து தெரிவித்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.