சூர்யாவும் விக்ரமும் நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக பிரபல இயக்குனர் பேட்டி ஒன்றில் கூறி வருத்தப்பட்டுள்ளார்.
Vasantha Balan Emotional Interview : தமிழ் சினிமாவில் யதார்த்தமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் தற்போது ஜெயில் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபர்னதி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
எதிர்பாராத நேரத்தில் வெளியான வலிமை அப்டேட் – அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கு செம கொண்டாட்டம்!
மேலும் வசந்தபாலன் அங்காடித் தெரு, வெயில் என எதார்த்தமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இருப்பினும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை.
சூர்யா மற்றும் விக்ரம் என இருவரிடமும் ஒரு க்ளாஸான கதையை கூறி ஓகே செய்துள்ளார் வசந்தபாலன். ஆனால் இருவரும் மாசான கதை வரும்போதெல்லாம் தன்னுடைய படத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே சென்றதாக பேட்டி ஒன்றில் கூறி வருத்தப்பட்டுள்ளார்.
சூர்யாவோ அல்லது விக்ரமோ இவரது படத்தில் நடித்திருந்தால் வசந்தபாலன் இன்று முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருந்திருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.