Varun Rajendhar

Varun Rajendhar : சர்கார் படத்தின் கதை என்னுடையது என வழக்கு தொடர்ந்திருந்த வருண் ராஜேந்தர் விஜய் சர்கார் அமைக்க என்னுடைய செங்கோலை விட்டு கொடுப்பதாக கூறியுள்ளார்.

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் சர்கார். முருகதாஸ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இந்நிலையில் வருண் ராஜேந்தர் என்பவர் சர்கார் படத்திற்காக எதிராக தொடர்ந்திருந்த வழக்கு இன்று விசாணைக்கு வந்தது.

அப்போது முருகதாஸ் தானும் வருணும் சமரசமாக சென்று விட்டதாக கூறியிருந்தார். இதனையடுத்து வருண் ராஜேந்தர் தளபதி விஜய் சர்கார் அமைக்க தன்னுடைய செங்கோலை விட்டு கொடுப்பதாக கூறியுள்ளார்.

இதனால் சர்கார் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் திட்டமிட்டபடி வரும் நவம்பர் 6-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்த கதை திருட்டு விவகாரத்தில் இருவரும் சமரசமாக சென்று விட்டதால் முருகதாஸ் கதையை திருடியது உண்மை தானா? எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.