போடா போடி படத்துக்கு பிறகு 4 ஆண்டுகள் நடிக்காதது ஏன் என்ற காரணத்தை வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.
Varalaxmi About Me Too : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். இவரது நடிப்பில் வெல்வட் நகரம் என்ற திரைப்படம் இந்த வாரம் ரிலீசாக உள்ளது.
தற்போது இந்த படத்திற்காக வரு பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார். அப்போது அவர் போடா போடி படத்திற்க்கு பிறகு 4 ஆண்டுகள் நடிக்காதது ஏன் என பேசியுள்ளார்.
போடா போடி படத்திற்கு பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என கூறினார், நான் அப்படியான வாய்ப்புகளே வேண்டாம் என உதறி விட்டேன்.
அன்னைக்கு அட்ஜஸ்ட் செய்திருந்தால் சினிமாவில் பெரிய நடிகையாக இருந்திருப்பேன் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.