Varalakshmi Talks About Sarkar :
கடந்த ஆண்டு இதே நாளில்தான் சர்க்கார் படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் தான் கலந்து கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாப்பாவாக தான் நடிக்க தொடங்கி ஓராண்டு நிறைவடைந்து விட்டது என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
பல தடைகளை, பல சர்ச்சைகளை கடந்து சர்கார் திரைப்படம் உலகம் முழுவதும் 80 நாடுகளில் 3000-க்கும் அதிகமான திரையரங்குகளில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை சுமந்துகொண்டு கடந்த ஆண்டு திரைக்கு வந்தது.
வணிக ரீதியாகவும் சர்கார் விஜய்யின் கேரியரில் மிகப்பெரிய மைல்கல் படமாக அமைந்தது. உலகம் முழுக்க 250 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூல் செய்து அசத்தியது.
இது தளபதியின் மாதம் – இணையத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்!
இப்படத்தில் வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தார் படம் வெளியாகி பல மாதங்கள் கழித்து தற்போது இப்படம் குறித்து அவர் ஒரு ட்வீட் செய்துள்ளார்.
அதில் கடந்த ஆண்டு இதே நாளில்தான் சர்க்கார் படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் தான் கலந்து கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாப்பாவாக தான் நடிக்க தொடங்கி ஓராண்டு நிறைவடைந்து விட்டது என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் கூட இப்படத்தின் இந்தி உரிமம் 23 கோடிக்கு வியாபாரம் ஆகி அசத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Exactly one year ago today I started to shoot for #sarkar..time really flies…one year since I played #pappa… miss the entire team and @ARMurugadoss sir…so muchh fun…!!! pic.twitter.com/8PnxbhMW91
— varalaxmi sarathkumar (@varusarath) June 1, 2019