vanitha vijayakumar Tweet : சோசியல் மீடியா புரொமோஷனை விட தயவு செய்து உங்கள் ரசிகர்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள் என நடிகர்கள் விஜய், ரஜினிகாந்த், கமல் மற்றும் சூர்யாவுக்கு நடிகை வனிதா திடீரென்று செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் வனிதா விவாகரத்து செய்துகொள்ளாத பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டதால் பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டார். இவருக்கு எதிராக பல பிரபலங்கள் விமர்சித்தாலும் ஒரே ஒரு ஆளாக நின்று எல்லாரையும் ஒத்தைக்கு ஒத்தையா நின்று சமாளித்தார். அண்மையில் விஜய் ரசிகர் பாலா என்ற இளைஞர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
செகண்ட் இன்னிங்சை ஆரம்பம்! வனிதா VS லஷ்மி ராமகிருஷ்ணன்
இறப்பதற்கு முன்பு “ மாஸ்டர் படம் பார்க்காமலே விடைபெறுகிறேன்” விடை பெறுகிறேன் என்று செய்து அனைத்து விஜய் ரசிகர்களையும் பெரும் கலகத்திற்கு உள்ளாக்கினார். இதை ஒரு காரணமாக பிடித்துக்கொண்டு ஒரு ட்வீட் செய்துள்ளார்.
அதில் ”தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சோஷியல் மீடியாவை புரொமோட் செய்யும் விதமாக பதிவுகளை போடாமல், ரசிகர்களின் மனக் கஷ்டங்களையும் பிரச்சனைகளையும் தீர்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட வேண்டும் என்றும், இந்த நேரத்தில் அது நிறைய இளைஞர்களுக்கு தேவைப்படுகிறது” என்றும் வனிதா பதிவிட்டுள்ளார்.
இந்த ட்விட்டருக்கு ரசிகர்கள் வனிதாவை வெளுத்து வாங்கியுள்ளனர். சிலர் ரசிகர் “ஒருவர் தனது குடும்ப பிரச்சினையால் இறந்ததற்கு பிரபலம் எப்படி பொறுப்பாக முடியும்?” என்று சரமாரியாக கேள்விகளை முன்வைத்தனர்.
Social media brimming with negativity.dont call this a decent society when you cant support people emotionally or be nice to them..#rip #apologise #justicefor
No happy hashtags.ACTORS please spread more positivity thru your Twitter handles with motivational messages to your fans— Vanitha Vijaykumar (@vanithavijayku1) August 14, 2020
It’s a humble request your fans who look upto u and will be so inspired and motivated if you give them a pep talk especially during this difficult times. SM promotions can wait but people’s lives are at stake and they need u.@actorvijay @rajinikanth @ikamalhaasan @Suriya_offl
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) August 14, 2020