ரம்யா கிருஷ்ணனிடம் வனிதா மன்னிப்பு கேட்கணும் என நகுல் பேசிய நிலையில் வனிதா பதிலடி கொடுத்துள்ளார்.

Vanitha Vijayakumar Reply to Nakhul : தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஒன்றுக்கு மூன்று திருமணம் செய்தது மட்டுமல்லாமல் குடும்பத்தாருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.

மேலும் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தியுடன் இணைந்து நடனமாடி வந்தார். சில வாரங்களுக்கு முன்னர் நடுவர்கள் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

அம்மன் திருக்கோலமும், இந்த வார விசேஷமும்..

அம்மன் வேடத்தில் இருந்த வனிதா தங்களை தரக்குறைவாகப் பேசியதாக குற்றம் சாட்டினார். மேலும் என்னை விடுங்க ரம்யா கிருஷ்ணன் எவ்வளவு பெரிய நடிகை. அவருடைய அனுபவம் என்ன? அவரை அப்படி பேசலாமா? அவரிடம் வனிதா மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறினார்.

Survivor ரியாலிட்டி Show-வில் கலந்து கொள்ளும் Ajith-தின் மகள்! – உற்சாகத்தில் ரசிகர்கள்! | HD

இதனையடுத்து வனிதா இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது பிரச்சனையை சம்மந்தப்பட்டவர்கள் நாங்கள் இருவரும் அமைதியாக இருக்கும்போது வேறு ஒருவர் இதைப் பற்றி பேச தேவையில்லை என கூறியுள்ளார். மேலும் நான் படங்களில் பிசியாக நடித்து வருகிறேன். கண்டவர்களின் உளறலை கேட்க தயாராக இல்லை என கூறியுள்ளார்.