அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக நடிகை வனிதா விஜயகுமார் பகிர்ந்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர் வனிதா விஜயகுமார். இந்நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான இவர் இதை அடுத்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இருந்தார்.

அதன் பிறகு சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்து வரும் இவர் தனக்கு இருக்கும் அரிய வகை நோய் பற்றியும் அதனால் அவர் சிரமப்படுவது பற்றியும் முதல் முறையாக மனம் திறந்து இருக்கிறார்.

அதில் அவர், தனக்கு கிளாஸ்ட்ரோ ஃபோபியா என்கின்ற நோயின் பாதிப்பு இருப்பதாகவும் அதனால் தன்னால் சிறிய இடங்களான லிப்ட், பாத்ரூம் போன்ற இடங்களில் அதிக நேரம் இருக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் இதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியிருக்கிறார். இந்த தகவல் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்து வைரலாகி வருகிறது.