சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம் குறித்து வனிதா பதிலடி கொடுத்துள்ளார்.
Vanitha Reply to Controversy Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா கடந்த ஜூன் 27ஆம் தேதி மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் பற்றிய விவாதம் சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் காரசாரமாக நடந்து வருகிறது. தன்னுடைய திருமணம் பற்றி விவாதித்து வரும் அனைவரையும் லெப்ட் ரைட் வாங்கி வருகிறார் வனிதா.
மேலும் விஜய் டிவியை சேர்ந்த நாஞ்சில் விஜயன் தான் சூர்யா தேவி என்பவரை தூண்டி விட்டு பேச வைத்து வருவதாக போலீசில் புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து நாஞ்சில் விஜயன் வனிதா வயதான ஒருவருடன் தன் கையில் மது பாட்டிலுடன் நெருக்கமாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இது டிரெய்லர் தான் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதே நபருடன் தற்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வனிதா எங்களுடைய குடும்ப நண்பர். அவரது மனைவி மற்றும் மகள் இன்று வரை எங்களுடன் குடும்பமாக இருந்து வருகிறார்கள். எங்கள் வீட்டில் நடக்கும் அனைத்து விஷேசங்களிலும் அவர்கள் கலந்து கொள்வார்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.