பத்திரிக்கைகளில் என்னையும் விஜயையும் சேர்த்து தவறாக எழுதி வாங்க என வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.
Vanitha Friendship With Vijay : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். பழம்பெரும் நடிகர் நடிகைகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகளான விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்.
இந்த படத்திற்கு பிறகு வனிதா மற்றும் விஜய் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது. அப்போது நடந்தவைகளைப் பற்றி வனிதா அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அப்போது இணையதளங்கள் கிடையாது பத்திரிகைகள்தான் செய்திகளை எழுதுவார்கள். என்னையும் விஜய்யின் சேர்த்து வைத்து தவறாக எழுதினார்கள்.
அதைப் பார்த்துவிட்டு நான் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தேன். அப்போது விஜய் என்னிடம் வந்து இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே எனக் கூறினார்.
கோப்ரா டீசர் எப்போது அப்டேட் கொடுக்க அஜய் ஞானமுத்து – இன்னைக்கும் ஒரு ட்ரீட் இருக்கு!
என்ன பத்தி தான் தப்பா எழுதறாங்க உனக்கு என்ன என நான் கேட்டேன். உன்னை பற்றி எழுதுகிறார்கள் என்றால் அவர்கள் உன்னை ஞாபகத்தில் வைத்துள்ளார்கள் என்று அர்த்தம்.
அவர்கள் உன்னைப் பற்றி எழுதவில்லை என்றால் அன்று நீ இல்லை என அர்த்தம். இதெல்லாம் ஒரு பப்ளிசிட்டி என அவர் கூறினார். அப்போது எனக்கு சத்தியமா புரியல. அதன் பின்னர் ஒரு காலகட்டத்தில் அதை நான் புரிந்து கொண்டேன்.
அதிலிருந்து தான் பிரச்சனைகளையும் சர்ச்சைகளையும் தைரியமாக எதிர்கொள்ள கற்றுக்கொண்டேன் என கூறியுள்ளார். நான் இன்று இந்த அளவிற்கு துணிச்சலாக இருப்பதற்கு விஜய்யும் ஒரு காரணம் தான் என தெரிவித்துள்ளார்.