ரசிகர் ஒருவரின் பதிவைக் கண்டு பதறிய வனிதா முதல்வர் மற்றும் பிரதமருக்கு கோரிக்கை வைத்து பதிவிட்டுள்ளார்.
Vanitha Complaint to Narendra Modi : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவர் குழந்தைகளுக்கு அப்பாவான பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தன்னுடைய திருமணம் குறித்து விவாதம் செய்த அனைவரையும் விளாசி எடுத்தார் வனிதா.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கென ஒரு யூடியூப் சேனலை தொடங்கி நடத்தி வருகிறார்.
இவரது பெயரில் தற்போது போலி கணக்கு ஒன்றை யூட்யூபில் செயல்பட தொடங்கியுள்ளது. இது குறித்து ரசிகர் ஒருவர் வனிதாவுடன் தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து அந்த ரசிகருக்கு நன்றி தெரிவித்த வனிதா, இது போன்ற ஏமாற்று காரர்களை யூடியூபில் தடை செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனல்களை தொடங்கி இயக்கலாம் என்று நடைமுறையில் இருக்கும் முறையை மாற்றியமைக்க வேண்டும். யூடியூப் சேனல் தொடங்குவார்கள் யார் அவர்களின் பின்னணி என்ன என்பது குறித்த தகவல்களை சேகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் யூடியூப் சேனல் தொடங்குவார்கள் அவர்களின் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். அது போன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கோரிக்கை வைத்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
வனிதாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் இவர் சொல்வது சரி கூறி வருகின்றனர். சிலரோ வனிதாவை கலாய்த்து வருகின்றனர்.
இதோ நீங்களே பாருங்க