லாஸ்லியாவிடம் வீடியோ காலில் பேசியுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார்.
Vanitha About Losliya Father Death : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.
லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மாரடைப்பு காரணமாக கனடாவில் உயிரிழந்துள்ளார். இதனால் இலங்கையில் லாஸ்லியாவின் குடும்பத்தினர் மிகவும் சோகத்தில் உள்ளனர்.
ரசிகர்கள் பலரும் வனிதாவிடம் லாஸ்லியாவுக்கு ஆறுதல் கூறுமாறு கோரிக்கை வைத்து வந்தனர். இப்படியான நிலையில் வனிதா லாஸ்லியாவிடம் வீடியோ காலில் பேசியதாக தெரிவித்துள்ளார்.
அவர் மிகவும் வருத்தத்தில் இருந்தாலும் ஸ்ட்ராங்காக இருக்கிறார் என தெரிவித்துள்ளார். மேலும் லாஸ்லியாவின் அப்பா இறுதியாக லாஸ்லியாவிடம் வீடியோ காலில் பேசியுள்ளார்.
அப்போது அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை. நன்றாக தான் இருந்துள்ளார். அதன்பின்னர் அவரது உறவினர் ஒருவர் போன் செய்தபோது எடுக்கவில்லை. பின்னர் அவர் கனடாவில் உள்ள மற்றொரு உறவினருக்கு கூறி அவரை சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.
அந்த உறவினர் சென்று பார்த்த போது மரியநேசன் உயிரிழந்திருந்தார். தற்போது கனடாவில் இருந்து இலங்கைக்கு உடலை கொண்டு வருவது என்பது சிக்கலான ஒன்றாக உள்ளது.
அப்படியே கனடா சென்று அவரை பார்ப்பதாக இருந்தாலும் ஒருவர் மட்டுமே செல்ல முடியும் சூழல் உள்ளது. லாஸ்லியா இலங்கை செல்வதற்கான வேலைகளில் விஜய் டிவி குழு இறங்கி உள்ளது என தெரிவித்துள்ளார்.
லாஸ்லியாவுக்கு என்னுடைய ஆறுதலும் அரவணைப்பும் எப்போதும் இருக்கும் எனவும் வனிதா தெரிவித்துள்ளார்.