ஒருவனுக்கு ஒருத்தி என்ற கேட்டு புதிய அர்த்தத்தைக் கூறியுள்ளார் வனிதா விஜயகுமார்.
Vanitha About Indian Culture : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் கலந்து கொண்ட இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.
பவர் ஸ்டார் சீனிவாசனுடன் இணைந்து பிக்கப் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்காக இருவரும் மாலையும் கழுத்துமாக நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த வனிதா விஜயகுமார் நாலு கல்யாணம் இல்லை 40 கல்யாணம் கூட பண்ணிகல அது என்னுடைய விருப்பம். அது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை என பேசினார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது?
மேலும் அவர் முட்டிக்கு மேல் உடை அணிந்து வெளியிட்ட புகைப்படம் குறித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார். இதை செய்தியாளர்கள் சந்திப்பில் 40 கல்யாணம் பண்ணுவேன் என சொல்கிறீர்களே ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் இந்திய கலாச்சாரம் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த வனிதா ஒருவனுக்கு ஒருத்தி என்பதை இந்தியா சரியாக பின்பற்றவில்லை. வெளிநாடுகளில் தான் இதனை சரியாக பின்பற்றி வருகிறார்கள். ஒருவருடம் இருக்கும்போது அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும்.
அவரை விட்டு பிரிந்து விட்டு இன்னொருவனுடன் சேர்ந்து வாழ்வது அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும் அது தான் ஒருத்தனுக்கு ஒருத்தி என கூறியுள்ளார்.
நான் 4 இல்ல…40 திருமணம் கூட செய்துகொள்வேன்! – Actress Vanitha Vijayakumar அதிரடி பேட்டி