வானத்தைப்போல சீரியலில் இருந்து திடீரென துளசி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஸ்வேதா விலகிக் கொண்டு உள்ளார்.

Vanathai Pola Thulasi Character Update : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் வானத்தைப் போல. இந்த சீரியலில் நாயகியாக துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஸ்வேதா.

சமீபத்தில் தான் சீரியலில் இவருக்கு ராஜபாண்டி உடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு அண்ணன் தங்கை உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது ‌‌போல காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த நிலையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஸ்வேதா இந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோலி, ஆபத்தானவராக மாறுவார் : காம்பீர் கருத்து

வேலு இனி அவருக்கு பதிலாக துளசி என்ற கதாபாத்திரத்தில் மன்யா ஆனந்த் என்பவர் நடிக்கிறார். இவர் இதற்கு முன்னதாக ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாக்கியரேகா என்ற சீரியலில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல கதையோடு தான் Tamilcinema-விற்கு வர ஆசைப்பட்டேன் – Exclusive interview with Allu Arjun | Pushpa