கரோனா வைரஸ் காரணமாக நடிகர் வடிவேலு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Vadivelu Video on Corona Virus Awareness : சீனாவில் உருவாகிய கரோனா வைரஸ் கிட்டத்தட்ட 300 நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு இன்னும் சில வாரங்கள் அதிகரிக்கப்படும் எனவும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடிகர் வடிவேலு கரோனா வைரஸ் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, உலக நாடுகள் அணு ஆயுத வெடிகுண்டுகளை மண்ணில் போட்டு புதைத்துவிட்டு மனித நேயத்தை வளர்க்க வேண்டிய நேரம் இது. டாக்டர்கள் தான் கடவுள்கள். அவர்கள் சொல்வதை கேளுங்கள்.
கோட்டை தாண்டி நானும் வரமாட்டேன் நீ வரக்கூடாது என்பது போல அது கோடு இது ரோடு. வீட்டிலேயே இருங்கள்.
உங்களது குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக்கொடுங்கள் அதற்காக கடவுள் கொடுத்துள்ள நேரமிது என நினைத்துக் கொள்ளுங்கள்.
மேலும் குழந்தைகளுக்கு யாருக்கும் கை கொடுக்க கூடாது. யாரையும் முத்தம் கொடுக்க அனுமதிக்க கூடாது என்பதைக் குறித்து சொல்லி புரிய வையுங்கள் எனவும் வடிவேலு கூறியுள்ளார்.
https://twitter.com/VadiveluOffl/status/1253352538407043073?s=19