ரெட் கார்டு போடப்பட்டிருந்த நிலையில் தற்போது அதனை நீக்கியுள்ளது தயாரிப்பாளர் சங்கம்.

Vadivelu ReEntry in Cinema : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் வடிவேலு. காமெடியனாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் இறுதியாக சங்கர் தயாரிப்பில் 24 ஆம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இந்த படத்தில் நடிக்க தொடங்கியபோது சங்கர் உடனான ஏற்பட்ட பிரச்சனையில் தயாரிப்பாளர் சங்கம் வடிவேலு நடிப்பதற்கு ரெட் கார்டு போடப்பட்டது. இதனால் நான்கு வருடங்களாக நடிக்காமல் இருந்து வந்தார் வடிவேலு.

பாராலிம்பிக்கில் ‘பலே’ வீராங்கனை : 25 பதக்கம் வென்று, மெகா சாதனை

தற்போது தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டை நீக்கி இருப்பதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து அவர் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐந்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முதலில் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் படத்தில் நடித்து முடித்து விட்டு அடுத்து இரண்டு படங்களில் நாயகனாக நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இணையத்தை கலக்கும் Aattral படத்தின் முதல் பாடல்! – இப்போ இதான் Trend | Hey Nee Lyrical Video

பின்னர் மீண்டும் காமெடியனாக நடிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார். மீண்டும் நடிப்பது முதல் முறையாக சினிமாவுக்கு வந்து வாய்ப்பு தேடிய போது கிடைத்த அனுபவத்தை தருவதாக வடிவேலு தெரிவித்துள்ளார். ரசிகர்களின் மகிழ்ச்சி தான் என்னுடைய மகிழ்ச்சி என கூறியுள்ளார்.

‌‌