Vadivelu Re-Entry in Suraj Direction

நடிகர் வடிவேலு ஹீரோவாக ரி-என்ட்ரி
கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vadivelu Re-Entry in Suraj Direction : தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. தமிழ் சினிமாவின் அனைத்து ஹீரோக்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் இவர் ஹீரோவாகவும் 23-ம் புலிகேசி, இம்மை அரசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் சங்கருடன் ஏற்பட்ட தகராறால் இவருக்கு ரெட் கார்ட் போடப்பட்டது.

இப்படியான நிலையில் இவர் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்ற படத்தில் ஹீரோவாக ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுராஜ் சுந்தர் சி நடிப்பில் வெளியான தலைநகரம் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் வடிவேலு நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்ததால் இவர் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கும் இதையே டைட்டிலாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.