நடிகர் வடிவேலு அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது பகிர்ந்துள்ள தகவல்கள் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் காமெடி மன்னனாக பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவரது நடிப்பில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அண்மையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் வடிவேலு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்துள்ளார். சுவாமி தரிசனம் செய்த பிறகு வெளியே வந்த வடிவேலுவை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வடிவேலு, எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் கோவில் சிறப்பு பெற்றது. என்ன மணக்குறைகள் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் சன்னிதானம் வந்தால் மணக்குறைகள் நீங்கும் என தெரிவித்தார். அதன் பிறகு, வடிவேலுவிடம் பேட்டியாளர்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் வாரிசு, துணிவு பற்றிய சுவாரசியமான கேள்வியை எழுப்பியுள்ளனர், அதற்கு அவர் இரண்டு படங்களுமே வெற்றி பெற வேண்டும் எனக் கூறியவர் எல்லா படங்களும் வெற்றி பெற வேண்டும், சினிமா நல்லா இருந்தால்தான் அனைவரும் நன்றாக இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தான் எந்த கட்சிக் கூட்டணியிலும் இல்லை எனக் கூறி என்னுடைய முந்தைய காமெடி நடிகர்களின் கூட்டணி வந்தால் நடிக்க வேண்டியது தான் என்றும் தெரிவித்தார். அதன் பிறகு தான் நிறைய படங்கள் நடித்து வருவதாக கூறியவர் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரம் ஓடி கொண்டிருப்பதாகவும் பலரும் படத்தைப் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக போன் செய்து வாழ்த்தி பாராட்டு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இப்படத்தின் வெற்றியாள் தயாரிப்பாளர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாகவும் நான் மீண்டும் திரைக்கு வந்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்து அனைத்தும் கடவுளின் ஆசிர்வாதம் தான் என பேட்டியாளர்களிடம் கூறியுள்ளார். இவர் பகிர்ந்து உள்ள இந்த சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.