நடிகர் வைகைப்புயல் வடிவேலு தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Vadivelu in Web Series : தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. அன்று முதல் இன்று வரை இவரது அனைத்து காமெடிகளும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது.
இன்றைய மீம்ஸ் கிரியேட்டர்களின் உயிர்நாடியாக இருந்து வருகிறார் வடிவேலு. ஷங்கர் இயக்கத்தில் 24ம் புலிகேசி படத்தில் நடிப்பதாக வாக்கு கொடுத்து விட்டு பின்னர் அப்படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் வடிவேலுக்கு ரெட் கார்ட் போடப்பட்டிருந்தது.
இதுநாள் வரை படங்களில் நடிக்க முடியாமல் இருந்து வந்தார் வடிவேலு. தற்போது இவர் வெப் சீரிஸ் ஒன்றின் மூலமாக ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகரம், படிக்காதவன், மருதமலை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சுராஜ் வடிவேலுக்கு கதை ஒன்றை கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் படமாக உருவாக இருந்த இக்கதையை வடிவேலு வெப் சீரிஸாக இயக்குமாறு கேட்டுக் கொண்டதையடுத்து இதில் மாற்றங்களை செய்து வெப் சீரிஸ் தொடராக இயக்கவுள்ளார் சுராஜ்.
அதன் பின்னர் வடிவேலு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வடிவேலு வருகையால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.