நடிகர் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வடிவேலு. காமெடி நடிகராக பயணத்தை தொடங்கிய இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.
அதன் பிறகு ஹீரோவாக நடிக்க தொடங்கிய வடிவேலு தொடர்ந்து ஹீரோவாகவும் படங்களில் நடித்து வந்தார். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக சங்கர் தயாரிப்பில் நடித்த ஒப்பந்தமாக இருந்த நிலையில் பட குழுவினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வடிவேலுக்கு ரெட் கார்ட் போடப்பட்டு நடிக்க முடியாமல் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த பிரச்சனைகள் அனைத்தும் கலையப்பட்டு தற்போது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் வடிவேலுவுடன் சிவானி நாராயணன் உட்பட பலர் இணைந்து நடித்துள்ளனர். நவம்பர் மாதம் வெளியிடப்பட இருந்த இந்த படம் சில காரணங்களால் டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்திற்கு தள்ளிப் போய் உள்ளது. மேலும் இந்தப் படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைத்திருக்க சென்சார் முடிவுகள் வெளிவந்த பிறகு ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.