Vadivelu Emotional Speech

படத்தில் நடிக்க ஆசை என்றும் ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கண்கலங்கியபடி கூறியுள்ளார் வைகைப்புயல் வடிவேலு.

Vadivelu Emotional Speech : தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார் வடிவேலு.

இதனைத் தொடர்ந்து அரண்மனைக்கிளி, கிழக்கு சீமையிலே, காலம் மாறிப்போச்சு, விரலுக்கேத்த வீக்கம், சங்கமம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, என் புருஷன் குழந்தை மாதிரி, போன்ற எண்ணற்ற பல தமிழ் படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

ஆனால் சமீபத்தில் வரும் படங்களில் எவற்றிலும் வடிவேலுவை காண முடிவதில்லை. மேலும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்வதில்லை.

இப்படியான நிலையில் தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வடிவேலு எனக்கு நடிக்க தெம்பு இருப்பதாகவும், படத்தில் நடிக்க ஆசை இருப்பதாகவும், எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்றும் கலங்கியபடி கூறியுள்ளார்.

மேலும் நீங்கள் எல்லாம் ஒரு வருடம் லாக் டவுன்ல இருந்தீர்கள் ஆனால் நான் 10 வருடம் லாக் டவுனில் இருந்தது எவ்வளவு மன வருத்தமாக இருந்தது தெரியுமா.. என்றும் கூறியுள்ளார்.

அவரின் இந்த பேச்சு பார்த்தவர் அனைவரின் கண்களையும் கலங்க வைத்துள்ளது.

இந்தப்பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.