சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக உள்ள வாடிவாசல் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பாகவே சிக்கலில் சிக்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா சூரரை போற்று படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க ஜி.வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த நிலையில் வாடிவாசல் என்ற தலைப்பிலேயே ஜெகநாதனின் உதவி இயக்குனர் ஒருவர் சூர்யாவிடம் கதை ஒன்றை கூறியுள்ளாராம்.
இதனால் இரண்டு கதையும் ஒன்றாக இருக்குமோ என்ற குழப்பம் ஏற்பட்டு இருப்பதாக பத்திரிகையாளர் ஒருவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.