அனல் மேலே பனித்துளி என்று உருக வைத்த ரம்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ரம்யா. கன்னட நடிகையான இவர் தற்போது தன்னுடைய பெயரை திவ்யா என மாற்றிக் கொண்டுள்ளார்.

தமிழில் குத்து படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா அதன் பிறகு கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அதன்பிறகு பட தயாரிப்பு மற்றும் அரசியலில் ஈடுபட தொடங்கிய இவருடைய போட்டோக்கள் கூட சமூக வலைதள பக்கங்களில் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது இவருடைய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

தற்போது ரம்யா ஆள் அடையாளம் தெரியாமல் மாறி உள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்கள்