V3 படம் என்ன சொல்கிறது? வித்யாவின் கொலைக்கு சரியான தீர்ப்பு கிடைத்ததா என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஆடுகளம் நரேன் பாவனா எஸ்தர் அணில் பொன்முடி உட்பட பலரது நடிப்பில் அமுதவாணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் V3 ( Vidhya Victim Verdict)
படத்தின் கதைக்களம் :
வித்யா என்ற பெண் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும்போது ஐந்து பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்படுகிறார். அவரது அப்பா ஆடுகளம் நரேன் மற்றும் தங்கை எஸ்தர் அணில் என இருவரும் சேர்ந்து வித்யாவை தேட போலீஸ் எரிந்து போன சடலமாக வித்யாவை மீட்கின்றனர்.
பிறகு இந்த பாலியல் வன்கொடுமை குறித்து பத்திரிகைகள் தொலைக்காட்சி சேனல்கள் அனைத்தும் பரபரப்பாக பேச அரசாங்கம் கொடுக்கும் அழுத்தத்தால் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு என்கவுண்டர் செய்யப்படுகின்றனர். கடைசியில் என்கவுண்டர் செய்யப்பட்ட இளைஞர்கள் குற்றவாளிகள் அல்ல அவர்கள் நிரபராதிகள் என அவர்களது பெற்றோர்கள் மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு தொடுக்கின்றனர்.
அதன் பிறகு இந்த வழக்கில் நடந்தது என்ன வித்யாவின் கொலைக்கு காரணமானவர்கள் யார் என தெரிய வந்ததா? வித்யாவின் கொலைக்கு சரியான தீர்ப்பு கிடைத்ததா? என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.
படத்தைப் பற்றிய அலசல் :
சிவகாமியாக வரலட்சுமி சரத்குமார், இறந்து போன வித்தியாவின் அப்பாவாக ஆடுகளம் நரேன் தங்கையாக எஸ்டர் அணில் போலீஸ் அதிகாரியாக பொன்முடி என அனைவரும் ஆகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
படத்தின் இயக்குனர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தண்டனை வேண்டாம், இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தான் வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கிறார் இயக்குனர் அமுதவாணன்.
ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் சுமார் ரகம். படத்தின் இசை பலம் சேர்க்கிறது.
இயக்குனர் பாலியல் குற்றங்களை தடுக்க பாலியல் தொழில்களை அங்கீகரிக்க வேண்டும் என்ற கருத்தை கடைசியில் சொல்லி முடிக்கிறார். இதனால் பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்டுள்ள டெல்லியில் தான் நிர்பயா கொலை நடந்தது என்பதை இயக்குனர் மறந்துவிட்டாரோ என கேள்வி எழுப்ப வைக்கிறது.
இதனால் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க இயக்குனர் சொல்லும் விஷயம் சரியான தீர்வை கொடுக்குமா என்பதை நேயர்களாகிய உங்களிடமே விட்டு விடுகிறோம். உங்களது கருத்தை எங்களோடு ஷேர் செய்யுங்கள்.