Uriyadi 2 Review

Uriyadi 2 Review : சூர்யாவின் 2D எண்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜயகுமாரின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் உறியடி 2. இந்த படம் குறித்த விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

கல்லூரி மாணவனாகவும் சமூகத்தில் நாடாகும் அநீதிகளையும் தட்டி கேட்டு அதனை தடுக்க முயலும் சமூக போராளியாகவும் நடித்துள்ளார் விஜய் குமார்.

இவர் வசித்து வரும் மலை கிராமத்தில் பல நாடுகளில் தடை செய்யபட்ட பூச்சி கொல்லி மருந்து ஆலையை அரசியல் வாதிகள் லஞ்சம் வாங்கி கொண்டு திறக்கின்றனர்.

இதனால் அந்த கிராமும் அதனை சுற்றியுள்ள கிராமங்களும் எந்தளவிற்கு பாதிப்புகளை சந்திக்கின்றன? அவற்றில் இருந்து இப்பகுதி மக்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பது தான் இப்படத்தின் மீதி கதையும் களமும்.

படத்தை பற்றிய அலசல்

நடிப்பு :

விஜயகுமார், சுதாகர், விஸ்மயா ஆகியோர் நடிப்பு அற்புதம். அரசியல் வசனங்கள் படத்தில் பட்டய கிளப்புகின்றன. கை தட்டல்களை வாங்கி குவிகின்றன. அதே சமயம் நம்மை சிந்திக்கவும் வைக்கின்றன.

இசை :

96, சீதக்காதி உள்ளிட்ட படங்களில் தன்னுடைய அபார திறமையை நிரூபித்திருந்த கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்திற்கு ஏற்றார் போல பின்னணி இசையில் மெர்சல் காட்டியுள்ளார்.

ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் :

பிரவீன் குமார் என் என்பவர் இப்படத்திற்கு சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார். அதே போல் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ள லினு எம் படத்திற்கு என்ன தேவையோ அதனை உணர்ந்து பணியாற்றியுள்ளார்.

இயக்கம் :

தேர்தல் நேரத்தில் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக விஜய் குமார் இந்த படத்தை இயக்கி இருப்பது பாராட்ட வேண்டிய விசியம். இந்த படத்தை தயாரித்த சூர்யாவின் 2D எண்டெர்டைன்மெண்ட் நிறுவனத்திற்கும் பாராட்டுகள்.

தம்ப்ஸ் அப் :

1. சாதி அரசியலை துணிந்து பேசியது.
2. சிந்திக்க வைக்கும் அரசியல் வசனங்கள்
3. திரைக்கதை
4. இசை
5. சமுக கருத்து
6. சிறந்த இயக்கம்

YouTube video

REVIEW OVERVIEW
உறியடி-2 விமர்சனம்.!
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
uriyadi-2-reviewஉறியடி 2 ஓட்டளிக்கும் முன்பு நம்மை நிச்சயம் சிந்திக்க வைக்கும் திரைப்படமாக இருக்கும். குடும்பத்துடன் பார்த்து பாராட்ட வேண்டிய திரைப்படமாக இருக்கும்.