மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யாவுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது யார் என்பது பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

Unknown Secrets of Maanaadu : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் பல்வேறு சர்ச்சை மற்றும் தடைகளைத் தாண்டி வெளியாகி வெற்றியை பெற்றுள்ள திரைப்படம்தான் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது.

பெருமாளின் தீர்த்தம் ஆனாள் ‘சபரி’

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யாவுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தவர் அரவிந்த் சாமி தான் என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். அவரிடம் முதல் முறையாக கதையை கூறியபோது உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் படப்பிடிப்புகள் துவங்க தாமதமான காரணத்தினால் அவர் வேறு படங்களில் நடித்ததால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என கூறியுள்ளார்.

Thanjavur-ல் அவரை தெரியாதவர் யாரும் இருக்கமாட்டாங்க – நடிகர் Durai Sudhakarயை புகழ்ந்த தயாரிப்பாளர்!

மேலும் இதனை உறுதி செய்யும் விதமாக மாநாடு படத்திற்கு ஒளிப்பதிவு செய்த அரவிந்த்சாமி இந்த கதையை நேசித்தவன் என்ற முறையைச் சொல்கிறேன் இது சிறந்த படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபுவின் பேட்டியும் அரவிந்த் சாமியின் ட்விட்டர் பதிவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.