பொன்னியின் செல்வன் படத்தில் முதலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது யார் என்பது பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.

வசூல் ரீதியாக மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ள இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், ஜெயராம், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

நடிகை ஐஸ்வர்யா ராய் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் சரத்குமார் ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது நடிகை அனுஷ்கா தான் என தற்போது தெரிய வந்துள்ளது.

மணிரத்தினம் அவர்கள் 2011 ஆம் ஆண்டு இந்த படத்தின் சூட்டிங் தொடங்கியது அனுஷ்காவை தான் நந்தினி கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்துள்ளார். ஆனால் அப்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடத்த முடியாமல் போக மீண்டும் படத்தை தொடங்கிய போது ஐஸ்வர்யா ராயை தேர்வு செய்துள்ளார். அனுஷ்கா உடல் எடை கூடி குண்டாகி விட்டதால் தற்போது வாய்ப்பு இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார் என்பதை குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.