எட்டு வருடங்களுக்கு முன்பு விஜய் நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாக இருந்ததாகவும் பின்னர் அப்படம் கைவிடப்பட்டது எனவும் சுஹாசினி தெரிவித்துள்ளார்.
Unknown Secret of Ponniyin Selvan : தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர் மணிரத்னம். இவர் தற்போது அவருடைய வாழ்நாள் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், கார்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளியேறிய முக்கிய நடிகர் – அதிர்ச்சியில் படக்குழு
தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் எட்டு வருடங்களுக்கு முன்பே விஜய் மற்றும் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ஆகியோரை வைத்து எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் மணிரத்னம்.
ஆனால் அப்போது கிராபிக்ஸ் அனிமேஷன் உள்ளிட்டவைகள் பெரிய அளவில் முன்னேற்றம் அடைய வில்லை என்பதால் இப்படம் கைவிடப்பட்டு விட்டதாக சுகாசினி அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இந்த தகவலை அறிந்த தளபதி ரசிகர்கள் 8 வருடத்திற்கு முன்பே விஜய் நடிப்பில் பொன்னியின் செல்வன் உருவாகியிருந்தால் அப்பறம் மாபெரும் வெற்றி படமாக இருந்திருக்கும் என கூறி வருகின்றனர்.
அதேசமயம் விஜய் பொன்னியின் செல்வன் படத்தை தவற விட்டதை எண்ணி அவர்கள் வருத்தமும் அடைகின்றனர்.