சுப்பு இயக்கத்தில் சுமன், கொட்டாச்சி, அங்கிதா நவ்யா, அருள் டி ஷங்கர், ஷினவ், வெங்கட் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் உணர்வு.
Unarvu Movie Review :
படத்தின் கதைக்களம் :
ராமதுரை ( வெங்கட் ) என்பவர் கலங்கரை விளக்கம் என்ற கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இந்தியாவில் பிச்சைக்காரர்களே இருக்க கூடாது என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் இவர் மெரினா உள்பட சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு வேலை கொடுத்து அவர்களின் வாழ்க்கையையே மாற்றி வந்தவர்.
ஒரு நாள் இவர் வழியில் 3 பிச்சைக்காரர்களை பார்க்கிறார். அவர்களுக்கும் வேலை கொடுத்து வாழ்க்கையை மாறுகிறார். பிச்சை எடுத்து கொண்டிருந்த தங்களின் வாழ்க்கையை மாறிய முதலாளிக்கு அவர்கள் மூவரும் விசுவாசத்துடன் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் ராமதுரையை முதலமைச்சர் சுமன் நேரில் அழைத்து சென்னையில் உள்ள ஒரு கிரவுண்டை உங்களுக்கு தருகிறேன். அதை வைத்து பிச்சைக்காரர்களுக்கு எதையாவது செய்யுங்கள் என கூறுகிறார்.
அதன் பின்னர் முதலமைச்சர் தனக்கு தொந்தரவாக எம்.எல்.ஏ ( அருள் டி ஷங்கர் ) இருப்பதாக கூற அவரை நான் பார்த்து கொள்கிறேன் என வாக்கு கொடுக்கிறார் ராமதுரை. பாவம் ராமதுரைக்கு இதில் இருக்கும் உள்குத்து தெரியவில்லை.
எனவே இவர் தான் வாழ்க்கை கொடுத்து தனக்கு விஸ்வாசமாக உள்ள ஒரு பிச்சைக்காரரை வைத்து எம்.எல்.ஏ-வை கொலை செய்ய திட்டமிடுகிறார். இவர்களின் திட்டம் நிறைவேறியதா? இதனால் நடக்கும் விபரீதங்கள் என்னென்ன என்பது தான் இப்படத்தின் உணர்வுபூர்வமான கதை.
படத்தை பற்றிய அலசல்
நடிகர் நடிகைகளின் நடிப்பு :
படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள் என்பதை விட வாழ்ந்துள்ளார்கள் என்று கூறலாம்.
குறிப்பாக மூன்று பிச்சைக்காரர்கள், வெங்கட் அவர்களின் நடிப்பு அற்புதம்.
தொழில்நுட்பம் :
இசை :
நகுல் அப்யங்கரின் பின்னணி இசை படத்திற்கு மெருகேற்றியுள்ளது.
ஒளிப்பதிவு :
டேவிட் ஜானின் ஒளிப்பதிவு சிறப்பு, காட்சிகள் ஒவ்வொன்றையும் தெளிவாக படமாக்கியுள்ளார்.
எடிட்டிங் :
சந்திரனின் எடிட்டிங் கச்சிதம்.
இயக்கம் :
இயக்குனர் சுப்பு உணர்வுபூர்வமான கதையை கையில் எடுத்து அழகான கோர்வையாக கொடுத்துள்ளார். முகம் சுழிக்கும் வகையில் எவ்வித காட்சியும் இல்லாதது படத்தின் கூடுதல் சிறப்பு.
தம்ப்ஸ் அப் :
1. படத்தின் கதை
2. நடிகர்களின் நடிப்பு
3. பின்னணி இசை
4. ஒளிப்பதிவு
தம்ப்ஸ் டவுன் :
1. சில கதாபாத்திரங்கள் திடீரென படத்தில் காணாமல் போய் விட்டது.
2. இறுதியில் அந்த பிச்சைக்காரனின் குடும்பம் என்னாவது என்றே தெரியாமல் போனது.