திருக்குவளையில் அனுமதி வாங்காமல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Udhayanidhi Stalin Arrest : தமிழகத்தில் எதிர்க்கட்சியாக செயல்படுவது திமுக. இந்த கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின் அவர்களை இளைஞரணி தலைவரான உதயநிதி ஸ்டாலின் அவர்களும் தொடர்ந்து ஆளும் கட்சியை குறை கூறி அறிக்கை வெளியிடுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
தங்களது கட்சியில் நடக்கும் பிரச்சனைகளை எல்லாம் அவர்கள் கண்டு கொள்வதில்லை. அதேபோல் அரசு சொல்லும் வழி முறைகளின் அவர்கள் எந்த விதத்திலும் பின்பற்றாமல் இருந்து வருகின்றனர்.
இப்படியான நிலையில் கோவிட் விவகாரத்தில் நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழக அரசை குறை கூறும் திமுக, இப்போது எந்த விதிமுறையும் பினபற்றாமல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.
திருக்குவளையில் நடந்த அரசியல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பலர் முக கவசம் அணியவில்லை, அவ்வளவு ஏன் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினே முக்கவசம் அணியாமல் தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
எந்தவித அனுமதியும் இல்லாமல் திருக்குவளையில் கொரானா விதிமுறைகளையும் தாண்டி அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் போலீசாரால் கைது செய்யப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்க